2020, 20 வார்த்தைகளில்..
மைக்ரோ கவிதைப் போட்டி
"கவிதையே இலக்கியத்தின் உயரிய வடிவம்"
மைக்ரோ கவிதை என்பது கவிதையின் ஒரு வடிவமாகும், அதில் குறைந்தபட்ச எழுத்துக்களின் மூலம் எழுத்தாளர்கள் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்.
"கடுகு சிறுத்தாலும்; காரம் குறையாது"
"சஹானா இணைய இதழ்" மற்றும் "ஸ்டோரிமிரர்" இணைந்து இந்த மைக்ரோ கவிதை போட்டியை நடத்த உள்ளது. அதன் தலைப்பு "2020, 20 வார்த்தைகளில்.."
இந்த வருடம், உலக மக்கள் அனைவருக்குமே ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கும். 2020 ஆம் வருடத்தின் சிறப்பை; சிறுகுழந்தை கூட சொல்லும். "சாப்பிடலைனா கொரோனா வண்டி வரும் என்று மாடர்ன் அம்மா மிரட்ட..ஹிஹி, வாழ்க்கையே 2020 முன்; 2020 பின் என்று கூட பிரிக்கலாம் என்றாகி விட்டது, ஏனென்றால் அத்தனை மாற்றங்கள், நினைவுகள், இழப்புகள், எண எண்ணிலடங்கா உணர்ச்சிகளைக் கொண்டு உள்ளது, 2020.
2020 ன், அனுபவங்களை 20 வார்த்தைக்குள் கொண்டு வருவதே இந்த போட்டியின் சிறப்பம்சமாகும்.
இதன் மூலம் பல மனிதர்களின் உணர்வுகளை "மைக்ரோ" கவிதைப் போட்டி பதிவு செய்து விடும்.
போட்டியின் கரு :
உங்களின் 2020, 20 வார்த்தைகளுக்குள்.
கட்டணம்: இலவசம்
5 விதிகள்:
1. கவிதை 20 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
2. கவிதை எந்த வகையாகவும் இருக்கலாம்.
3. எழுத்தாளர்கள் தங்கள் சுயமான பதிவை பதிவிடவும்.
4. ஒரு எழுத்தாளர் எத்தனை பதிவு வேண்டுமானாலும் பதிவிடலாம்; நிறைய பதிவுகள் செய்த எழுத்தாளரே வெற்றியாளர் ஆவார்.
5. இரண்டு எழுத்தாளர்கள் சமநிலையில் இருந்தால் ஆசிரியரின் மதிப்பு கொண்டு வெற்றி தீர்மானிக்கப் படும்.
பரிசு:
1. முதல் மூன்று நபர்களுக்கு ஸ்டோரிமிரரின் 250 ரூபாய் மதிப்புடைய வவுச்சர் கொடுக்கப்படும். அதை வைத்து ஸ்டோரி மிரர் கடையில் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்.
2. போட்டியில் இடம் பெற்ற தேர்ந்தெடுத்த கவிதைகள் சஹானா இணைய இதழில் வெளியிடப்படும்.
http://sahanamag.com/subscribe/
நாட்கள்: 20 டிசம்பர், 2020 - 31 டிசம்பர், 2020
மொழி: தமிழ்
முடிவு: 28 ஜனவரி, 2021
தொடர்புகொள்ள
மின்னஞ்சல்: neha@storymirror.com
தொலைபேசி: +91 9372458287